தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
காளான் - 1 பாக்கட்
அரைக்க:
இஞ்சி, பூண்டு விழுது – 1 டே. ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி
இவை அணைத்தையும் அரைத்து, பின்
தேங்காய் - 1/4 கப் சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க:
பெரிய வெங்காயம் -1
உப்பு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
நெய் -1 டே.ஸ்பூன்
செய்முறை:
குக்கரில் எண்ணை ஊற்றி
சூடானதும், பட்டை , லவங்கம், ஏலக்காய் , பி.இலை தாளிக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது போட்டு நன்கு வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,
பின் நறுக்கிய காளானை சேர்த்து, நன்கு வதக்கவும். (காளானில் உள்ள நீர் சுண்டும் வரை வதக்கவும்)
பின் ஊறவைத்த அரிசி போட்டு
மெதுவாக கலக்கவும்.
(குறிப்பு: அரிசியை கழுவி, பின் 1 கப் அரிசிக்கு, 2 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அத்தண்ணீரை வடிகட்டி
அரிசியை மேலே கூறியவாறு கலக்கவும். இவ்வாறு செய்யும் போது சாதம் உதிறியாக வரும்.)
அரிசியை உடையாமல்
கலக்கியதும், வடித்த தண்ணீர் ஊற்றி,
உப்பு, நெய் மற்றும் புதினா, கொத்தமல்லி போடவும்.
கிளறி மூடவும்.
ஹையில் ஒரு விசில் வந்ததும்
தீயை முழுதாக குறைத்து 5 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment