செய்முறை
1/2 கப் கொண்டைக்கடலையை நன்றாக ஊறவைக்கவும்.
1/2 கப் சிறிய சோயாவை சுடு தண்ணீரில் போட்டு, 2 நிமிடம் கழித்து பிழிந்து எடுக்கவும்.
சோம்பு தூள் - 1/2 டீ.ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீ.ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீ.ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/2 டீ.ஸ்பூன் )
தயாராக வைக்கவும்.
பின் குக்கரில் 1 குழிகரண்டி எண்ணெய் விட்டு, 2 பட்டை, கிராம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து, முந்திரி மற்றும் 1 பெரிய வெங்காயம் நறுக்கியதை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்
நறுக்கிய 1 தக்காளி, பச்சை மிளகாய், 1 டே.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, புதினாகொத்தமல்லி, மேலே குறிப்பிட்டுள்ள தூள்கள், 1 கரண்டி தயிர் ,சோயா கொண்டைகடலை, இவை அணைத்தையும் ஒன்றாக சேர்த்து, நன்கு 5 நிமிடம் வதக்கவும்.
பின் 1 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து கடலை வேகும் வரை 4 விசில் குக்கரில் விடவும்.
கடலை வேகும் சமயத்தில்,
1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, பின் 1 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
(கடலை வேக 1 கப் தண்ணீர் சேர்த்ததால் அரிசியை 1 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.)
ஊறிய அரிசியை அதே நீருடன் சேர்த்து, உப்பு, 1 ஸ்பூன் நெய்,கொத்தமல்லி தூவி , ஹையில் 1 விசிலும், முழு சிம்மில் 5 நிமிடம் விட்டு, அடுப்பை அணைக்கவும்.
உங்கள் கருத்துக்களை பகிரவும்.
No comments:
Post a Comment