ஜாம்
ஆப்பிள், மாதுளை, திராச்சை, பப்பாளி, கொய்யா, பைன்னாப்பிள், எலுமிச்சை சாறு(1) – தேவையான அளவு எடுத்து அரைத்து வடிகட்டவும்.
எலுமிச்சையில் சிட்ரிக் தன்மை உள்ளதால் , இதுவே ப்ரிசெர்வேடிவாக இருக்கும்.
முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் பழச்சாறு, சர்க்கரை மற்றும் ரெட் கலர் சேர்த்து கிளறவும்.
சாஸ் பதம் வரும் வரை கிளறவும்.
ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து, ஜாமை ஒரு துளி ஊற்றினால் கரையாமல் பந்து போல் வரும். அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: ஊற்றும் பொழுது மரகட்டையின் மேல் பாட்டிலை வைத்து ஊற்றவும், ஏனென்றால் சூட்டில் பாட்டில் க்ரேக் ஆகிவிடும்.
ஆறியதும் ஃப்ரிஜில் வைக்கவும்.
(ப்ரிசர்வேடிவ்( கே.எம்.எஸ் பௌடர்) சேர்த்தால் ஃப்ரிஜில் வைக்க தேவையில்லை)
குறிப்பு:
1. நமக்கு பிடித்த பழங்களை போடலாம்.
ஏதேனும் ஒரு பழத்தில் செய்யலாம்.
2. பதம் பார்க்க:
ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து, ஜாமை ஒரு துளி ஊற்றினால் கரையாமல் பந்து போல் வரும். அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
3. ஆப்பிள் , கொய்யாவில் பெக்டின் தன்மையுள்ளதால் அதுவே திக்கனிங்ஏஜன்டாக செயல்படும்.
No comments:
Post a Comment