முதலில் பிரண்டையை சுத்தம் செய்து , கழுவி கட் செய்யவும்.
பின் வெங்காயம்( 1 கப்) காய்ந்த மிளகாய் ( 4 அ 5), சீரகம், கடலை பருப்பு, உ.பருப்பு, சிறிதளவு, கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
வதங்கியதும், பிரண்டையை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுப்பை அணைத்து, உப்பு புளி, 1/4 கப் தேங்காய் , கொத்தமல்லி தூள் (1 டீ.ஸ்பூன் ) ,
கொத்தமல்லி தழை சேர்த்து, கலக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.
பிரண்டை நன்கு பசியை தூண்டும் குணம் உடையது.
No comments:
Post a Comment