தேவையான
பொருட்கள்:
வெள்ளை ரவை -1
கப்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – ¼ கப்
நெய் – 2 (அ) 3
டே. ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ¼
டீ.ஸ்பூன்
முந்திரி,
திராச்சை
செய்முறை:
ஒரு கடாயில் நெய்
ஊற்றி, முந்திரியை போடவும்.லேசாக சிவந்து வரும் பொழுது, திராச்சையை போட்டு
பொரிந்ததும், அதை தனியாக வைக்கவும்.
பின் அதே நெய்யில்,
ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
அடுப்பை அனைத்து,
முந்திரி, திராச்சை, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
வேறொரு பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பி பதம் வரும் வரை கிளறவும்.
பின் ரவை கலவையை
அதில் சேர்த்து, 1 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
ஆறியவுடன் கையில்
நெய் தடவி , உருண்டைகளாக பிடிக்கவும்.
சில மணி நேரம்
ஊறியதும் பரிமாறவும்.
இந்த லட்டு மிகவும்
மிருதுவாக இருக்கும்.
No comments:
Post a Comment