செய்முறை
1 கிலோ நாட்டு கோழியை சுத்தம் செய்து, உப்பு , மஞ்சதூள் சேர்த்து , குக்கரில் 2 விசில் விடவும்.
ஒரு கடாயில்,
1 கப் சின்ன வெங்காயம்
1 டீ.ஸ்பூன் சீரகம்
3/4 டீ.ஸ்பூன் மிளகு
1 டே.ஸ்பூன் மல்லிவிதை
இஞ்சி,பூண்டு- 8 பல்
வரமிளகாய் - 5
இவை அணைத்தையும் , எண்ணெய் சேர்த்து வதக்கி, அரைக்கவும்.
பின்
ஒரு கடாயில், எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் நறுக்கிய ½ கப் சின்ன வெங்காயம் , ½ கப் பெரிய வெங்காயம்,
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் 1 ஸ்பூன் கரம்மசாலா பொடி சேர்த்து, அதன் பின் அரைத்த மசாலா, வேகவைத்த கோழி, உப்பு சேர்த்து, சுருண்டு வரும் வரை, மூடி வேகவைக்கவும்.
அடுப்பை சிம்மில்
வைத்து ½ கப் தேங்காய்பால் சேர்த்து, 2 நிமிடம் கழித்து
அடுப்பை
அணைக்கவும்.
கொத்தமல்லி தழை
தூவவும்.
No comments:
Post a Comment