ஆப்பம்:
புழுங்கரிசி -1
கப்
பச்சரிசி – 1 கப்
உளுந்து – ¼ கப்
இவை மூன்றையும்
நன்கு ஊறவைத்து, அதனுடன் ½ கப் சாதம், ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து , நன்றாக
தோசைமாவு பதத்திற்கு அரைத்து,
உப்பு சேர்த்து,
புளிக்க விடவும்.
ஆப்பம் சுடுவதற்க்கு
முன், 1 துளி சோடா உப்பை தண்ணீரில் கரைத்து, மாவோடு கலக்கி வைக்கவும்.
ஆப்பக்கடாயில் 1
கரண்டி மாவை ஊற்றி சுழற்றி விட்டு, சிறிது எண்ணை விட்டு மூடி, வேக விடவும்.
சூடாக
கடலைகறியுடன் பறிமாறவும்.
கடலை கறி:
கொண்டைகடலையை 8
மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு குக்கரில் எண்ணை
ஊற்றி, சீரகம் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்( 1 கப்) , தக்காளி (1/2
கப்) , பச்சைமிளகாய் (2) இஞ்சிபூண்டு விழுது ( 1 டீ.ஸ்பூன்) சேர்த்து நன்கு
வதக்கவும். ( உப்பு சேர்த்து வதக்கினால், தக்காளி சீக்கிரமாக வதங்கும்).
பின் அதனுடன் என்
கறிமசாலா தூளை ( பொடி லிங்கை பார்க்கவும்)
சேர்த்து வதக்கி,
ஊறிய கடலையை சேர்த்து, உப்பு மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு மூடி, 5
விசில் விடவும்.
கடலை வெந்ததும்,
தேங்காய் விழுது ( ¼ கப் ) சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி 2 நிமிடம் கொதிக்க
வைத்து, பறிமாறவும்.
கடலகறி |
No comments:
Post a Comment