எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

எண்ணை கத்தரிக்காய் குழம்பு


செய்முறை



1 கப் சின்ன வெங்காயத்தை கறிவேப்பிலையுடன் நல்லெண்ணை சேர்த்து, லேசாக வதக்கவும்.
அடுப்பை அணைத்து, 2 டே.ஸ்பூன் வத்தகுழம்பு பொடியை சேர்க்கவும். (பொடி லிங்கை பார்க்கவும்.)


பின் ¼ கப் தேங்காய், மஞ்சதூள் சேர்த்து, ஆறியவுடன் விழுதாக அரைக்கவும்.



பின் ஒரு கடாயில் 1 குழிகரண்டி நல்லெண்ணை ஊற்றி, கடுகு வெந்தயம் கறிவேப்பிலை மிளகாய் தாளித்து, அதனுடன் 5 பல் பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



பின் பிஞ்சு கத்தரிக்காயை 4 ஆக வகுந்து,






சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின் தக்காளி (1) சேர்த்து, உப்பு சிறிது சேர்த்தால் சீக்கிரம் வதங்கும்.


பின் அரைத்த விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து வேக வைக்கவும்.

பின் எலுமிச்சை அளவு புளியை கரைத்து ஊற்றி , பச்சை வாசனை இல்லாமல், எண்ணை மேலே கசிந்து வரும் வரை, மிதமான தனலில் ,மூடி வைக்கவும்.

கொத்தமல்லி தூவி பறிமாறவும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...