எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பேபி கார்ன் புலாவ்


தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி-1 கப்

அரைக்க:

தேங்காய்- 1/2 கப்
பட்டை , லவங்கம், சோம்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் – 2

இவற்றை அரைத்து , 1 கப் தண்ணீர் சேர்த்து, கலக்கி வடிகட்டவும்.




முந்திரி,ஏலக்காய், பிரிஞ்சி இலை – சிறிதளவு







இஞ்சி, பூண்டு விழுது – 1  டே. ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
பிஞ்சு சோளம் - 1 பாக்கட்
ஆயில் - 1 குழிகரண்டி
உப்பு
கொத்தமல்லி தழை

செய்முறை


அரிசியை கழுவி, பின் தேங்காய் மசாலா பாலை அளந்து ஊற்றவும்.
அதாவது 1 கப் அரிசிக்கு, 2 கப் நீர் ,  தேங்காய் பாலுடன் நீர் சேர்த்து 2 கப் ஆக்கவும்.
15 நிமிடன் ஊற வைக்கவும்.

பின் குக்கரில் எண்ணெய்  ஊற்றி, முந்திரி,ஏலக்காய், பிரிஞ்சி  தாளித்து, 
 இஞ்சிபூண்டு விடுது சேர்த்து வதக்கவும்.


பின் வெங்காயம், சோளம் சேர்த்து வதக்கி,


பின் ஊறவைத்த அரிசியை அப்பாலுடன் ஊற்றி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து,மூடவும்.


ஹையில் ஒரு விசில் வந்ததும் தீயை முழுதாக குறைத்து 5 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.

குக்கரில் ஒட்டாமல் வரும்.











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...