செய்முறை
சுத்தம் செய்த 1/2 கிலோ இறாலுடன், 1 முட்டை, உப்பு மிளகு தூள் சேர்த்து பிரட்டவும்.
பின் அதனுடன் தலா 2 ஸ்பூன் மைதா, சோள மாவு மற்றும் 1 ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, எண்ணெய் பொரித்தெடுக்கவும்.
சீக்கிரம் எடுத்து விடவும் இல்லையென்றால் இறாலின் தன்மை மாறிவிடும்.
பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிக பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டை சேர்த்து வதக்கவும்.
பின் 1/4 கப் வெங்காயம் மற்றும் 1/4 கப் குடைமிளகாயை சேர்த்து, சிறிது அஜெனோமோட்டோ தூவி வதக்கவும்.
பின் 1 டீ.ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது, 1 டீ.ஸ்பூன் சோயா சாஸ், சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் இறாலை சேர்த்து, வெங்காய தாள் தூவி சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment