செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு 2 பட்டை, கிராம், பி.இலை, ஏலக்காய் தாளித்து, 1 கப் நறுக்கிய சின்ன+ பெரிய வெங்காயம் , 4 முதல் 6 பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் அதனுடன் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, அதில் 1/2 கிலோ கோழி சேர்த்து வதக்கவும்.
கோழி வதங்கியதும், 1 கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி, மூடி மிதமான தனலில் வேகவைக்கவும்.
இவ்வாறு செய்தால் சிக்கன் மிருதுவாக இருக்கும்.
சிக்கன் வேகும் சமையத்தில், 1/2 மூடி தேங்காய் துருவியது, முந்திரி, 1 ஸ்பூன் கசகசா சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து,
கோழி முக்கால் பதம் வெந்ததும், விழுதை சேர்த்து, கொத்தமல்லி தூவி வேகவைக்கவும்.
இக்குருமா பூரி,தோசை, பிரியானி,..... வுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment