செய்முறை
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, து.பருப்பு, பாசிப்பருப்பு, உ.பருப்பு தலா 1 மேஜைக்கரண்டி, கடலைப்பருப்பு சிறிது , காய்ந்த மிளகாய் 3 முதல் 6 வரை (தேவைக்கேற்ப) சேர்த்து மிதமான தனலில் பொன்னிறமாகும் வரை வறுத்து,
அதனுடன் சுத்தம் செய்த 1 கட்டு வல்லாரைக்கீரை, கறிவேப்பிலை சிறிது, சேர்த்து வதக்கி,
அடுப்பை அணைத்து, 1 கப் தேங்காய் துருவல்,1 பல் பூண்டு, நெல்லியளவு புளி, உப்பு சேர்த்து கலக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.
இது இட்லி, தோசை , ரொட்டியுடன் சுவையாக இருக்கும்.
தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து , சாதத்துடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment