செய்முறை
1/2 கப் பாசிப்பருப்பை வறுத்து, பின் குக்கரில் அளவாக நீர் விட்டு 1 விசில் விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகமிளகு தாளித்து, 1/4 கப் சின்ன வெங்காயம், 2 பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் 1 தக்காளி சேர்த்து வதக்கி, அதனுடன் நறுக்கிய 1 கட்டு பாலக்கீரையை சேர்த்து வதக்கி,
மஞ்சதூள், 1 ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கி, பின் வெந்த பருப்பை அதன் நீருடன் சேர்த்து கலக்கி, மூடி, சிம்மில் 5 நிமிடம் வைத்து , அடுப்பை அணைக்கவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment