செய்முறை
மாவை இதில் ( இதை அமுக்கவும்) உள்ள முறையிலும் அரைத்து கொள்ளலாம்
அல்லது
அரிசியை ஊறவைத்து பொடித்து வைக்கவும்.
பின் 1 கப் மாவிற்கு 1.5 கப் தண்ணீர் சேர்த்து , உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் 1 கரண்டி விட்டு, கடுகு உ.பருப்பு, க.பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம், 4 பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வெங்காயம் வதங்கியதும், 1/4 கப் தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி,
பின் கரைத்த மாவை கைவிடாமல் கிளறிக்கொண்டே ஊற்றி, (சிம்மில் வைக்கவும்)
திருண்டு மிருதுவாக வந்தவுடன் , அடுப்பை அணைத்து , ஆறவிடவும்.பின் கொழுகட்டை பிடித்து,
இட்லி பானையில் 10 நிமிடம் அவித்து, பறிமாறவும்.
kolukkattai seymuraium vilakkappadangkalum arumai.
ReplyDeleteThank u
Delete