செய்முறை
முதலில் 1/2 காலிஃப்லவரை சுத்தம் செய்து, 3/4 வேக்காடு வேகவைத்து வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, ஜீரகம் தாளித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.பிறகு 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய 1 தக்காளி, 5 பஜ்ஜிமிளகாய் சேர்த்து வதக்கி, அதனோடு 2 ஸ்பூன் கறிமசாலா பொடி , சிறிது மஞ்சதூள் , தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
வதங்கியதும், வேகவைத்த காலிப்பூவை சேர்த்து, கொத்தமல்லி தூவி, மசாலா காயில் பிரண்டு வரும் வரை கிளறி, கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.
இது சப்பாத்தி, ப்ரெட், தோசை, சாதவகைகளுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment