தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
லேசாக வறுத்த பாசிபருப்பு – ½ கப்
வெண்பொங்கல் செய்ய:
ஜீரகம் – ½ டீ.ஸ்பூன்
மிளகு – ½ டீ.ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை
இஞ்சி –சிறு துண்டு
முந்திரி
நெய் – 2 டே.ஸ்பூன்
ஆயில் – 1 டே.ஸ்பூன்
உப்பு
சர்க்கரை பொங்கல் செய்ய:
வெல்லம் – ½ கப் ( பொடித்து, சிறிது தண்ணீர் விட்டு
காய்ச்சி, கரைந்ததும் வடிகட்டவும்)
நெய் – 2 டே.ஸ்பூன்
திராச்சை, முந்திரி
ஏலக்காய், ஜாதிபத்திரி
செய்முறை:
முதலில் அரிசியை பருப்போடு சேர்த்து ½ மணி நேரம்
ஊறவைக்கவும்.
( இப்பொழுது தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்)
பின் 4 முதல் 5 கப் தண்ணீர் சேர்த்து, 5 விசில் விட்டு, அரிசிபருப்பை கொளைய வேகவிடவும்.
பின் வேகவைத்ததை சரி பாதியாக பிரித்து, இரு பாத்திரத்தில் வைக்கவும்.
முதல் பாகம்:
பொங்கலில் உப்பு சேர்த்து, வெண்பொங்கலுக்கு தாளித்து
கொட்டி, சமமாக கலக்கவும்.
குறிப்பு:ஜீரகமிளகை பொடி செய்து சேர்த்தால் உண்ணும் பொழுது எடுத்து வைக்க மாட்டோம், பச்சரிசியை ஜீரனம் செய்யும்.
இரண்டாம் பாகம்:
பொங்கலில் வெல்ல பாகை ஊற்றி, ஏலக்காய் ஜாதிபத்திரி தூளை
சேர்த்து,
நெய்யில் திராச்சை முந்திரி தாளித்து சேர்த்து, அடுப்பில் வைத்து
1 நிமிடம் கிளறி பறிமாறவும்.
குறிப்பு: வெல்லத்திற்கு பதில் கற்கண்டு சேர்த்து, சிறிது பால் அல்லது மில்க்மைட் சேர்த்தால் கற்கண்டு பாத் (அ) கற்கண்டு பொங்கல் தயார்.
No comments:
Post a Comment