எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

2 இன் 1 பொங்கல் / Sweet and spicy pongal



தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
லேசாக வறுத்த பாசிபருப்பு – ½ கப்

வெண்பொங்கல் செய்ய:

ஜீரகம் – ½ டீ.ஸ்பூன்
மிளகு – ½ டீ.ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை
இஞ்சி –சிறு துண்டு
முந்திரி
நெய் – 2 டே.ஸ்பூன்
ஆயில் – 1 டே.ஸ்பூன்
உப்பு




சர்க்கரை பொங்கல் செய்ய:

வெல்லம் – ½ கப் ( பொடித்து, சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி, கரைந்ததும் வடிகட்டவும்)





நெய் – 2 டே.ஸ்பூன்

திராச்சை, முந்திரி
ஏலக்காய், ஜாதிபத்திரி






செய்முறை:

முதலில் அரிசியை பருப்போடு சேர்த்து ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
( இப்பொழுது தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்)


பின் 4 முதல் 5 கப் தண்ணீர் சேர்த்து, 5 விசில் விட்டு, அரிசிபருப்பை கொளைய வேகவிடவும்.




பின் வேகவைத்ததை சரி பாதியாக பிரித்து, இரு பாத்திரத்தில் வைக்கவும்.


முதல் பாகம்:

பொங்கலில் உப்பு சேர்த்து, வெண்பொங்கலுக்கு தாளித்து கொட்டி, சமமாக கலக்கவும்.

குறிப்பு:ஜீரகமிளகை  பொடி  செய்து சேர்த்தால் உண்ணும்  பொழுது  எடுத்து  வைக்க மாட்டோம், பச்சரிசியை  ஜீரனம்  செய்யும்.





இரண்டாம் பாகம்:

பொங்கலில் வெல்ல பாகை ஊற்றி, ஏலக்காய் ஜாதிபத்திரி தூளை சேர்த்து,
நெய்யில் திராச்சை முந்திரி தாளித்து சேர்த்து, அடுப்பில் வைத்து 1 நிமிடம் கிளறி பறிமாறவும்.


குறிப்பு:  வெல்லத்திற்கு பதில் கற்கண்டு சேர்த்து, சிறிது பால் அல்லது  மில்க்மைட்  சேர்த்தால்  கற்கண்டு பாத் (அ)  கற்கண்டு பொங்கல் தயார்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...