எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் ப்ரியானி



மட்டன்  பிரியானி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2  கப் (400 கி)
மட்டன் – 500 கிராம்




பட்டை , லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 3  டே. ஸ்பூன்






பச்சை மிளகாய் – 2
காஸ்மீரீ மிளகாய் தூள் – 1 டீ.ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ.ஸ்பூன்

பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1

புதினா, கொத்தமல்லி  2  கைபிடி
உப்பு
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
நெய் -1 டே.ஸ்பூன்


மட்டனை ஊறவைக்க:



தயிர் – 1 டே.ஸ்பூன்
உப்பு, 











கரம் மசாலா, மிளகாய் தூள்,
புதினா, பச்சை மிளகாய், 

கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு சேர்த்து ஊறவைக்கவும்.




இவ்வாறு மட்டனை ஊறவைப்பதால் அது வெந்ததும்  மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.


செய்முறை:



முதலில் மட்டனை  ½ - 1  மணி நேரம்  ஊற வைக்கவும்.












பின் குக்கரில் எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை , லவங்கம், ஏலக்காய் , பி.இலை தாளிக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.











பின் நறுக்கிய  வெங்காயம் , தக்காளி  மற்றும்  பாதி புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி













பின்  ஊறிய மட்டனை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன்   காஸ்மீரீ மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.










மூடி  3 விசில்  விடவும்.





பின் ஊறவைத்த அரிசி போட்டு மெதுவாக கலக்கவும்.









(குறிப்பு:  அரிசியை கழுவி,  2 கப் அரிசிக்கு,  3 ½ கப்  தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அத்தண்ணீரை வடிகட்டி அரிசியை மேலே கூறியவாறு கலக்கவும். இவ்வாறு செய்யும் போது சாதம் உதிறியாக வரும்.)



அரிசியை உடையாமல் கலக்கியதும், வடித்த தண்ணீரை  ஊற்றி,  உப்பு, நெய் மற்றும் புதினா, கொத்தமல்லி போடவும்.
கிளறி மூடவும்.









ஹையில் ஒரு விசில் வந்ததும் தீயை முழுதாக குறைத்து 5 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.








பின் விருப்பப்பட்டால், பொறித்த வெங்காயம்  தூவி

கத்தரிக்காய் கொச்ஸு, தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.











கத்தரிக்காய் கொச்ஸு:






முதலில் கடுகு, சீரகம், மிளகு(1/2 டீ.ஸ்பூன்) , கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.






பின் நறுக்கிய தக்காளி (1), கத்தரிக்காய்(5), சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.






உப்பு சேர்த்தால் தக்காளி சீக்கிரமாக வதங்கும்.




பின் சீரக தூள் (1/4 டீ.ஸ்பூன்), மிளகாய் தூள் (1 டீ.ஸ்பூன்), மல்லி தூள் (2 டீ.ஸ்பூன்), மஞ்சள் தூள் (1/4 டீ.ஸ்பூன்) சேர்த்து வதக்கி, சிறிது நேரம் மூடி வைக்கவும்.













பின் நெல்லிகனி அளவு புளியை கரைத்து ஊற்றவும்.
உப்பு சேர்த்து, மூடி 








சுண்டும் வரை விடவும்.










கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும்.


விருப்பப்பட்டால் சிறிது எள் மற்றும் வேர்கடலையை வறுத்து பொடி செய்து இறுதியில் சேர்க்கலாம்.

இது ப்ரியானிக்கு நல்ல காம்பினேசன்.



 ப்ரியானி ஆற ஆற இன்னும் நன்கு உதிரியாகிவிடும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...