தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 துருவியது
கடலை பருப்பு - 1 டே.ஸ்பூன்
உளுந்து பருப்பு - 2 டே.ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 5 வரை (விருப்பம்)
புளி - நெல்லிகனி அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு
பூண்டு - 1 பல்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் கடலை பருப்பு, உளுந்து பருப்பு , காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை
எண்ணை விட்டு
வறுக்கவும்.
பின் பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
காய் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து, தேங்காய் சேர்க்கவும்.
பின் புளி பூண்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
இது சாதம், இட்லி, தோசை, ப்ரெட் உடன் சுவையாக இருக்கும்.
சட்னி வேறுமுறை:
பருப்புகளுடன் வெங்காயம், சீரகம், மல்லிவிதை சேர்த்து வதக்கி, பின் காய் சேர்த்து, பின் மேல் கூறிய வகையில் செய்யலாம்.
No comments:
Post a Comment