எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சங்கரா மீன் மசாலா



தேவையான பொருட்கள்

சிறிய வெங்காயம் – ½ கப்
பெரிய வெங்காயம் – ½ கப்
தக்காளி -1

அரைக்க:
தக்காளி – ½
மிளகு – 1 டீ.ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
பூண்டு – 5 பல்
சோம்பு – 1 டீ.ஸ்பூன்
இஞ்சி – விருப்பபட்டால்


சங்கரா மீன் - ½ கிலோ

மீனை சுத்தம் செய்து,
மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
உப்பு- 1 டீ.ஸ்பூன் சேர்த்து ½ மணி நேரம் ஊற வைக்கவும். 


தாளிக்க:
நல்லெண்ணை 2 மே.கரண்டி
கடுகு - ¼ டி. ஸ்பூன்
கறிவேப்பிலை, பச்சை மிளகாய்


செய்முறை:



முதலில் தக்காளி ,மிளகு , பூண்டு , சோம்பு, மஞ்சள் தூள் , மிளகாயை விழுதாக அரைக்கவும்.




பின் ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.






பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.






பின்  அரைத்த விழுதை போட்டு , உப்பு சேர்க்கவும்.






தேவையான அளவு தண்ணீர் விட்டு , பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.





பின் மீனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தனலில் வேகவைக்கவும்.

கொத்தமல்லி தூவி பறிமாறவும்.


குறிப்பு:

மீன் குழம்பு செய்யும் பொழுது, அகலமான கடாயில் செய்யவும். மீன் உடையாமல் இருக்கும்.
அதிமாக கிளற கூடாது.

கெளங்கா, சங்கரா, மத்தி, ஷீலா, வஞ்சரம், வவ்வால் மீன் முதலிய மீன்கள்  சுவையாக இருக்கும்.

பெரிய வெங்காயம் பதில் முழுக்க முழுக்க சின்ன வெங்காயம் உபயோகித்தால் சுவை நன்றாக இருக்கும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...