தேவையான பொருட்கள்
மீன் - 300 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 2 டே.ஸ்பூன்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் - 1 டீ.ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
எண்ணெய் - 2 டே.ஸ்பூன்
நெய் - 2 டே.ஸ்பூன்
பட்டை, லவங்கம், பி.இலை, ஏலக்காய் - 2
கொத்தமல்லி தழை- அலக்கரிக்க
செய்முறை:
அரிசியை கழுவி, 1 கப் அரிசிக்கு 1 3/4 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வைத்து, பின் அதனுடன் சிறிது எண்ணெய், கரம்மசாலா தூள்(1 டீ.ஸ்பூன்) மற்றும் அரிசிக்கேற்ற உப்பு சேர்த்து,
குக்கரில் 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
ஆறவிடவும்.
பின் ஒரு நான்ஸ்டிக் கடாயில், எண்ணை நெய் ஊற்றி, பட்டை, லவங்கம், பி.இலை, ஏலக்காய் தாளித்து, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கி, 1/4 கப் முதல் 1/2 கப் வரை நீர் சேர்க்கவும்.
பின் ஊறிய மீனை போட்டு இரு புறம், வேகவைக்கவும்.
மீனை தனியாக எடுத்து வைக்கவும்.
பின் சாதத்தை சேர்த்து, பிரட்டி, பின் வெந்த மீனை
மேலே வைத்து, கொத்தமல்லி தழை தூவி, மூடி
5 முதல் 10 வரை தீயை முழுதாக குறைத்து மூடிவைக்கவும்.
சூடாக பறிமாறவும்.
குறிப்பு:
மீனில் அதிகமாக முல் இல்லாமல் இருக்க வேண்டும்.
வேகும் பொழுது உடையாமல் செய்யவும்.
மீனை பொறித்து சேர்ப்பதை விட, இதனுடன் வேகவைத்தால், மிருதுவாக இருக்கும்.
மீனின் பச்சை வாசனை வராது.
No comments:
Post a Comment