எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மீன் ப்ரியானி





















தேவையான பொருட்கள்

மீன் - 300 கிராம்

பாஸ்மதி அரிசி - 1 கப்

வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2

இஞ்சிபூண்டு விழுது - 2  டே.ஸ்பூன்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் - 1 டீ.ஸ்பூன்
உப்பு


தாளிக்க:
எண்ணெய் -  2  டே.ஸ்பூன்
நெய் -  2  டே.ஸ்பூன்

பட்டை, லவங்கம், பி.இலை, ஏலக்காய் - 2

கொத்தமல்லி தழை- அலக்கரிக்க

செய்முறை:

அரிசியை கழுவி, 1 கப் அரிசிக்கு  1  3/4 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வைத்து, பின் அதனுடன் சிறிது எண்ணெய், கரம்மசாலா தூள்(1 டீ.ஸ்பூன்)  மற்றும் அரிசிக்கேற்ற உப்பு சேர்த்து,
குக்கரில் 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
ஆறவிடவும்.




முதலில் மீனை  இஞ்சிபூண்டு விழுது (1/ 2 டீ.ஸ்பூன்), மஞ்சள் தூள், மிளகாய் தூள் - 1 டீ.ஸ்பூன், உப்பு போட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.


பின் ஒரு நான்ஸ்டிக் கடாயில், எண்ணை நெய் ஊற்றி,  பட்டை, லவங்கம், பி.இலை, ஏலக்காய்  தாளித்து, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.






பின் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கி,  1/4 கப் முதல் 1/2 கப் வரை நீர் சேர்க்கவும்.









பின் ஊறிய மீனை போட்டு இரு புறம், வேகவைக்கவும்.







மீனை தனியாக எடுத்து வைக்கவும்.








பின் சாதத்தை சேர்த்து, பிரட்டி, பின் வெந்த மீனை
மேலே வைத்து, கொத்தமல்லி தழை தூவி, மூடி
5 முதல் 10 வரை தீயை முழுதாக குறைத்து மூடிவைக்கவும்.

சூடாக பறிமாறவும்.




குறிப்பு:

மீனில் அதிகமாக முல் இல்லாமல் இருக்க வேண்டும்.

வேகும் பொழுது உடையாமல் செய்யவும்.

மீனை பொறித்து சேர்ப்பதை விட, இதனுடன் வேகவைத்தால், மிருதுவாக இருக்கும்.

மீனின் பச்சை வாசனை வராது.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...