எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தக்காளி தொக்கு (அ) ஊறுகாய்








முதலில் தக்காளி (10 ), இஞ்சி, பூண்டு (10) பல்,  இவை அணைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இதை ஒரு அகலமான வானலியில் ஊற்றி, கல் உப்பு (2 டீ.ஸ்பூன்), மஞ்சள் தூள்  சேர்க்கவும்.கிளறவும்.
குறிப்பு:  உப்பு சேர்ப்பதால் தக்காளி சீக்கிரம் வதங்கும்.





நன்கு கொதித்து, சிறிது தண்ணீர் பதம் வற்றியதும், மிளகாய் தூள் (3 டீ.ஸ்பூன் )
சேர்த்து நன்கு கிளறவும். ருசி பார்த்து , தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.





சிறிது கெட்டியானதும், 50 மில்லி  நல்லெண்ணெயை  சேர்த்து, தீயை குறைத்து, கிளறவும்.




நன்கு வதங்கி எண்ணெய் விட்டு வரும் பொழுது, அடுப்பை அணைக்கவும்.




பின் சிறிது பெருங்காயதூள் மற்றும் வறுத்து பொடி செய்த வெந்தய தூள் (1/2 டீ.ஸ்பூன்) சேர்த்து கிளறி, ஆறியதும் ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தண்ணீர் படாமல் இருக்க வேண்டும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.



இது இட்லி, தோசை, சப்பாத்தி, தாளித்த சாதத்துடன்  பறிமாறலாம்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...