முதலில் தக்காளி (10 ), இஞ்சி, பூண்டு (10) பல், இவை அணைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இதை ஒரு அகலமான வானலியில் ஊற்றி, கல் உப்பு (2 டீ.ஸ்பூன்), மஞ்சள் தூள் சேர்க்கவும்.கிளறவும்.
குறிப்பு: உப்பு சேர்ப்பதால் தக்காளி சீக்கிரம் வதங்கும்.
நன்கு கொதித்து, சிறிது தண்ணீர் பதம் வற்றியதும், மிளகாய் தூள் (3 டீ.ஸ்பூன் )
சேர்த்து நன்கு கிளறவும். ருசி பார்த்து , தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
சிறிது கெட்டியானதும், 50 மில்லி நல்லெண்ணெயை சேர்த்து, தீயை குறைத்து, கிளறவும்.
நன்கு வதங்கி எண்ணெய் விட்டு வரும் பொழுது, அடுப்பை அணைக்கவும்.
பின் சிறிது பெருங்காயதூள் மற்றும் வறுத்து பொடி செய்த வெந்தய தூள் (1/2 டீ.ஸ்பூன்) சேர்த்து கிளறி, ஆறியதும் ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தண்ணீர் படாமல் இருக்க வேண்டும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இது இட்லி, தோசை, சப்பாத்தி, தாளித்த சாதத்துடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment