பட்டர் சிக்கன் மசாலா
400 கிராம் சிக்கன் துண்டுகளை, 1 டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது உப்பு, தயிர்( 2 டே.ஸ்பூன் ), கரம்மசாலா தூள் (1/2 டீ.ஸ்பூன்) , கசூரி மேத்தி, சேர்த்து பிரட்டி , ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பின் தனித்தனியாக:
வெங்காயம் – 3
தக்காளி -2
விழுதாக்கவும்.
ஒரு கடாயில் எண்ணை மற்றும் வெண்ணை சேர்த்து, சூடானதும் பட்டை,கிராம்,ஏலக்காய், பி.இலை தாளித்து, வெங்காய இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி விழுதை சிறிது உப்பு , சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சதூள், மிளகாய் தூள் (1.5 டீ.ஸ்பூன்), தனியாதூள் (2 டீ.ஸ்பூன்), கரம்மசாலா தூள்( 1 டீ.ஸ்பூன்), சிக்கன் ஊறிய மீதமான தயிர் கலவை , சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.
கடைசியாக , வறுத்த சிக்கன், கொத்தமல்லி தழை, 1 பின்ச் கசூரி மேதி( காய்ந்த வெந்தய இலை) சேர்த்து, 1 நிமிடம் கழித்து. அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment