தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1/4 கப்
நெய்- 1 கப்
ஆயில் - 3/4 கப்
செய்முறை
முதலில் மாவை , மிதமான தனலில் , கைப்பொறுக்கும் சூடு வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
நெய்யும் ஆயிலையும் மிதமாக சூடு செய்யவும்.
ஒரு அடிகனமான கடாயில், சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து, கரைத்து, ஒரு கொதி விடவும். (பிசுக்கு பதம் வரும்.)
அப்பொழுது மாவை தூவினது போல் போட்டு, கட்டி வராமல் கிளறவும்.
மாவு சிறிது வெந்து , பூத்து வரும் பொழுது,
சூடு செய்த நெய்+ஆயிலை பாதியை சேர்த்து , மிதமான தனலில் நன்கு கிளறவும்.
கிளற கிளற மாவு நெய்யை இழுத்து கொள்ளும். அப்பொழுது
மீதமுள்ள நெய்+ஆயிலை சேர்த்து, பூத்து வரும் வரை கிளறவும்.
நன்கு பூத்து, நெய் வெளியே வரும் பொழுது, உடனே அதை நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
சிறிது ஆறியதும், துண்டுகள் போடவும்.