ஒரு கடாயில் 1 டே.ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரியை போடவும், பாதி சிவக்கும் போது, உலர் திராச்சையை போட்டு வறுக்கவும்.
பின் 3/4 கப் ரவையை போட்டு, மிதமான தனலில் வறுக்கவும்.
லேசாக சிவந்து வரும் பொழுது, 1/4 கப் துருவிய தேங்காய் போட்டு, ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.
பின் 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
பின் 1/2 டீ.ஸ்பூன் ரோஸ்மில்க் எஸன்ஸ் மற்றும் 1/4 கப் பால் சேர்த்து, மிதமான தனலில் சுருண்டு வரும் வரை கிளறவும்.
சிறிது ஆறியதும், கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடித்து, சிறிது நேரம் ஊறியதும் , பறிமாறவும்.
No comments:
Post a Comment