எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் குழம்பு (வேறுமுறை)


 தேவையான பொருட்கள்
மட்டன் – ½  கிலோ
பெரிய வெங்காயம்- 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு
பச்சை மிளகாய் 2

விழுதாக:
இஞ்சி – சிறிது
பூண்டு – 6 பல் 

மசாலா அரைக்க:
சிறிய வெங்காயம் – 1 கப்
மசாலா பௌடர் 1 மேஜை கரன்டி  ( பொடி வகைகள் லிங்க்யை பார்க்கவும்)

 செய்முறை:

சுத்தம் செய்த மட்டனை 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் குக்கரில் விடவும்.

பின் ஒரு கடாயில் 1 மே.கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் சிறிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் அடுப்பை அணைத்து , மசாலா பொடியை போடவும். ஆறியதும் அரைத்து வைக்கவும்.

பின் வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுகிய பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

பின் தக்காளி போட்டு, அதனுடன் சிறிது உப்பு போட்டு நன்றாக வதக்கவும். 
தக்காளி நன்கு வதங்கியதும்,அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.

பின் தேவையான தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகவைத்த மட்டன் சேர்க்கவும்.





சிறிது நேரம் மூடி கொதிக்க விடவும்.



பின் ¼ கப் தேங்காய் பால் விட்டு, கொத்தமல்லி  சேர்த்து சிம்மில் 2 நிமிடம் விடவும்.



இது செமி கிரேவி பதம் வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.



குறிப்பு: இது சப்பாத்தி, தோசை, சாதம், தயிர் சாதம் உடன் சுவையாக இருக்கும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...