தேவையான
பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
சீரகம் – ½ டீ.ஸ்பூன்
தனியாதூள் – 1 டே.ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-4
மஞ்சதூள்
உப்பு
எண்ணெய்
நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்லவர், வெங்காயம்,
குடைமிளகாய், சோளம் – தலா ½ கப்
செய்முறை
முதலில் கேரட், பீன்ஸ், காலிஃப்லவர் குக்கரில் சிறிது
தண்ணீர், உப்பு சேர்த்து 1 விசில் விடவும்.
சோளத்தை வேகவைத்து உதிர்க்கவும்.
( பேபி கார்ன் கூட சேர்க்கலாம்)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், சீரகம், மிளகாயை
வதக்கவும்.
பின் அதில் தக்காளி சேர்த்து லேசாக வதக்கி , அடுப்பை
அணைத்து, தனியாதூள், மஞ்சதூள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்த்து,
வதக்கவும்,
பின் சோளம்,
வேகவைத்த காய்கள் சேர்த்து, காயில் உள்ள நீரை ஊற்றவும்.
உப்பு , மல்லிதழை சேர்த்து மூடி சிம்மில் 5 நிமிடம் விட்டு
அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால் சிறிது கரம்மசாலா தூள் சேர்க்கலாம்.
இதே முறையில் கடாய் காளான், கடாய் பனீர், கடாய் சிக்கன் செய்யலாம்.
இதே முறையில் கடாய் காளான், கடாய் பனீர், கடாய் சிக்கன் செய்யலாம்.
No comments:
Post a Comment