தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
தண்ணீர் - 3 கப்
காளான் - 1/2 கப் நறுக்கியது
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீ.ஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2
மிளகாய் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீ.ஸ்பூன்
எண்ணெய் - 1 குழிகரண்டி
உப்பு
கொத்தமல்லி, புதினா
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, விருப்பப்பட்டால் பட்டை லவங்கம் தாளிக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி, மிளகாய் , இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியதும், காளான் ,புதினா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு காளானில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கவும்.
பின் தண்ணீர் , உப்பு, கொத்தமல்லி சேர்த்து கொதி விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், ரவையை சேர்த்து மிதமான தனலில், மூடி வேகவைக்கவும். 2 நிமிடத்தில் தயாராகிவிடும்.
விருப்பப்பட்டால் இப்பொழுது சிறிது நெய் சேர்க்கவும்.
No comments:
Post a Comment