தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1 (தோல் உரித்து வட்டமாக நறுக்கவும்)
இஞ்சிபூண்டு விழுது - 2 டீ.ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ.ஸ்பூன்
மஞ்சதூள், உப்பு
எண்ணெய்
அரிசிமாவு-1 டே.ஸ்பூன்
செய்முறை
இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள் , மஞ்சதூள், உப்பு , இவை அணைத்தையும் கலக்கி, வாழைக்காயை போட்டு, பிரட்டி, 1 மணி நேரம் வைக்கவும். ஊறியதால் சிறிது நீர் விட்டு வரும், அப்பொழுது அரிசிமாவை சேர்த்து பிரட்டி, எண்ணெயில் மொறு மொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: காயை சன்னமாக வெட்டினால், சிப்ஸ் போல் வரும்,
சிறிது தடிமனாக வெட்டினால், வெளியில் மொறு மொறுப்பாகவும்,உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment