தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை - 2 கப்
புளித்த தயிர் - 2 கப்
சோடா உப்பு - 2 பின்ச்
வெங்காயம், கேரட், பீன்ஷ் - தலா 1/4 கப் நறுக்கியது
இஞ்சி துருவியது, பச்சை மிளகாய் -1
குறிப்பு: பட்டானி இருந்தால் சேர்க்கலாம்.
கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, முந்திரி - தாளிக்க
கொத்தமல்லி , உப்பு, எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் 2 டே.ஸ்பூன் ஆயில் ஊற்றி, கடுகு, பருப்புகள் தாளித்து, பின்
வெங்காயம், கேரட், பீன்ஷ் , இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து காய் பாதி வேகும் வரை வதக்கவும்.
பின் ரவையை சேர்த்து, மிதமான சூட்டில் 2 நிமிடம் வறுக்கவும்.
அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
பின் அதனுடன் தயிர் , உப்பு சேர்க்கவும்.
சோடா உப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
இவை அணைத்தையும் கலந்தால் பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். (ரவை ஊறினால் கெட்டியாகும்.)
இதை மூடி, 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் வறுத்த முந்திரியும் கொத்தமல்லியையும் சேர்த்து, இட்லி தட்டில் , ஸ்பூனால் எடுத்து வைக்கவும்
10 நிமிடம் ஆவியில் வேக வைத்து, சூடாக சட்னி, சாம்பாருடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment