எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

அவரப்பருப்பு சாதம்



தேவையான பொருட்கள்

அரிசி-1 கப்
அவரப்பருப்பு - 1/4 கப்
சீரகம், மிளகு - 1/2 டீ.ஸ்பூன்
பூண்டு - 6 பல்


சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1
கறிவேப்பிலை, பச்சை மிளகாய்

கடுகு, உளுந்து பருப்பு, காய்ந்த மிளகாய் - தாளிக்க
சாம்பார் தூள் - 1.5 டீ.ஸ்பூன்
மஞ்சதூள் - 1/4 டீ.ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய் - 1 கரண்டி
கொத்தமல்லி


செய்முறை



அரிசியும் பருப்பையும் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
சீரகம், மிளகு, 3 பல் பூண்டை மசிக்கவும்.




குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு,கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
 காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம்,பூண்டு, தக்காளி சேர்த்து, லேசாக வதக்கவும்.
பின் சாம்பார் தூள், மஞ்சதூள் சேர்க்கவும்.




பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, இடிச்ச சீரகமிளகு பூண்டை சேர்த்து, உப்பு கொத்தமல்லி தூவி கொதிக்கவிட்டு, ஊறிய அரிசிபருப்பை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு, சிம்மில் 1 விசில் விட்டு, அடுப்பை அணைக்கவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...