செய்முறை
1. குக்கரில் ஒரு
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும்.
2.
பின் இரண்டாக
வெட்டிய ¼ கிலோ காயை சேர்த்து வதக்கி, மஞ்சதூள், உப்பு, 1 டீ.ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
3.
அதில் 1 கப்
தண்ணீர் ஊற்றி, மூடி ஒரு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
வெந்தவுடன் காயுடன் சிறிது தண்ணீர் இருக்கும், அத்தண்ணீருடன் சப்பாத்தியின் மேல் காயை போட்டு உண்பதுதான் இதன் தனிச்சுவை.
விரும்பாதவர்கள் அளவான தண்ணீர் சேர்த்து காயை வேகவைத்து, சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
குறிப்பு:
காய் இளசாக
இருந்தால், காம்பை மட்டும் கில்லிவிட்டு, முழுதாக சேர்த்து, சமைக்கலாம்.
No comments:
Post a Comment