செய்முறை
குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை ,1 தக்காளி , மஞ்சதூள் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப் சின்ன வெங்காயம்,2 பச்சை மிளகாய், 1 தக்காளி, 3 முருங்கைக்காய் நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தனலில் வைக்கவும்.
காய் பாதி வெந்ததும்,
1 டீ.ஸ்பூன் சாம்பார் தூள் ( செய்முறை - இங்கே அழுத்தவும் ), பெருங்காயம், சேர்த்து, பருப்பில் கொட்டவும்.
2 டே.ஸ்பூன் தேங்காய் துருவல், கொத்தமல்லி , உப்பு, சேர்த்து காயை வேகவைக்கவும்.
காய் வெந்ததும், நெல்லிக்கனி அளவு புளியை கரைத்து, ஊற்றி, 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: முதலிலேயே புளி சேர்த்தால், காய் வேக நேரம் ஆகும், நீண்ட நேரம் புளி கொதித்தால் புளியின் ருசி மாறிவிடும்.
இதே முறையில் முள்ளங்கி, வெண்டைக்காய், மேராக்காய், கேரட் பீன்ஸ் உருளை கலந்த காய்களிலும் செய்யலாம்.
No comments:
Post a Comment