செய்முறை
1 கப் பாசிபயிரை கழுவி, அளவான தண்ணீர் விட்டு , பயிரை மசியாமல் வேகவைக்கவும்.
பின் ஒருகடாயில் ஒரு கரண்டி எண்ணை விட்டு, அது
காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து,
நறுக்கிய சின்ன வெங்காயம் ½ கப், 3 பச்சைமிளகாய், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த பயிர்,உப்பு, 1/4 கப் தேங்காய் துருவியதை சேர்த்து மிதமான தனலில் வதக்கவும்.
பின் கொத்தமல்லி சேர்த்து, கலக்கி பறிமாறவும்.
குறிப்பு: இதே முறையில் வெள்ளை கொண்டைகடலை, கருப்பு கொண்டைகடலை, கொள்ளு, பட்டானி, ராஜ்மா,கடலைப்பருப்பு, மொச்சை, வேர்க்கடலை,காராமணி, இவற்றை தனித்தனியாகவோ (அ) அணைத்து தானியங்களையும் சேர்த்து நவதான்ய சுண்டலாகவும் செய்யலாம்.
No comments:
Post a Comment