செய்முறை
சீரகம் - 1/2 டீ.ஸ்பூன்
மிளகு - 1/4 டீ.ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அ 3
கடலைப்பருப்பு - 1/2 டீ.ஸ்பூன்
இவற்றை எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து, பின் அது சிவக்க வரும் பொழுது, 1/4 டீ.ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
பின் அடுப்பை அணைத்து 1 டீ.ஸ்பூன் மல்லிதூள், 1/4 டீ.ஸ்பூன் பெருங்காயம், 1/4 கப் தேங்காய் சேர்த்து , விழுதாக அரைத்து வைக்கவும்.
பின் குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை ,1 தக்காளி , மஞ்சதூள் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
பின்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப் சின்ன வெங்காயம்,2 பச்சை மிளகாய், 1 தக்காளி, 3 முருங்கைக்காய் நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தனலில் வைக்கவும்.
காய் பாதி வெந்ததும்,
பருப்பையும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் , உப்பு , கொத்தமல்லி தழை சேர்த்து காயை வேக வைக்கவும்.
காய் வெந்ததும்,
நெல்லிகாய் அளவு புளியை கரைத்து ஊற்றி , 5 நிமிடம் மிதமான தனலில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
இதே முறையில் முள்ளங்கி, வெண்டைக்காய், மேராக்காய், கேரட் பீன்ஸ் உருளை கலந்த காய்களிலும் செய்யலாம்.
மினி இட்லியை இதனோடு பறிமாறலாம்.
No comments:
Post a Comment