எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

அரைச்சுவிட்ட சாம்பார் / Tiffin sambar / Restaurant style sambar




செய்முறை

சீரகம் - 1/2 டீ.ஸ்பூன்
மிளகு - 1/4 டீ.ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  - 2 அ 3
கடலைப்பருப்பு - 1/2 டீ.ஸ்பூன்

இவற்றை எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து, பின் அது சிவக்க வரும் பொழுது, 1/4 டீ.ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.

 பின் அடுப்பை அணைத்து 1 டீ.ஸ்பூன் மல்லிதூள், 1/4 டீ.ஸ்பூன் பெருங்காயம், 1/4 கப் தேங்காய் சேர்த்து , விழுதாக அரைத்து வைக்கவும்.



பின் குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை ,1 தக்காளி , மஞ்சதூள் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து  வேகவைக்கவும்.



பின் 



ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப் சின்ன வெங்காயம்,2 பச்சை மிளகாய்,  1 தக்காளி, 3 முருங்கைக்காய்  நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தனலில் வைக்கவும்.

காய் பாதி வெந்ததும், 



பருப்பையும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் , உப்பு , கொத்தமல்லி தழை சேர்த்து காயை வேக வைக்கவும்.

காய் வெந்ததும்,


நெல்லிகாய் அளவு புளியை கரைத்து ஊற்றி , 5 நிமிடம் மிதமான தனலில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.


 
இதே முறையில் முள்ளங்கி, வெண்டைக்காய், மேராக்காய், கேரட் பீன்ஸ் உருளை கலந்த காய்களிலும் செய்யலாம்.






மினி இட்லியை இதனோடு பறிமாறலாம்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...