செய்முறை
1 கப் பாஸ்மதி அரிசியை, 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
அரிசி ஊறிக்கொண்டிருக்கும் பொழுது,
1/2 கட்டு புதினா இலை
இஞ்சி , பூண்டு - 6 துண்டுகள்
பட்டை,லவங்கம்-2
சோம்பு - 1 டீ.ஸ்பூன்
பச்சை மிளகாய்-3
இவற்றை விழுதாக அரைக்கவும்.
குறிப்பு: 1. விழுதுடன் 1/2 கப் தேங்காயும் சேர்த்து அரைத்து, பாலாக பிளிந்து , தண்ணீருக்கு பதில் பயன்படுத்தலாம்.
2. விழுதுடன் இல்லாமல் , தேங்காய் பால் தனியாக எடுத்து, தண்ணீருக்கு பதில் பயன்படுத்தலாம்.
1/2 கப் வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
பின் குக்கரில் 1 கரண்டி ஆயில் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை, முந்திரி தாளிக்கவும்.
பின் புதினா விழுதை சேர்த்து, நன்கு வதக்கவும்.
விழுது வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கி, அரிசியை ஊறவைத்த தண்ணீரை ஊற்றி, கொதி வரும் பொழுது அரிசியை சேர்த்து, உப்பு சேர்த்து மூடி, 1 விசில் ஹை ஃப்லேமில் விட்டு, சிம்மில் 5 நிமிடம் விட்டு, அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment