எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சுரக்காய் கூட்டு



செய்முறை


இஞ்சி , பூண்டு - 6 துண்டுகள்
பட்டை,லவங்கம்-2
சோம்பு - 1 டீ.ஸ்பூன்
 மிளகாய்-3
சின்ன வெங்காயம் - 10

இவற்றை எண்ணெய் சேர்த்து வதக்கவும். பின்



அடுப்பை அணைத்து, 1/4 கப் தேங்காய், 1 டீ.ஸ்பூன் மல்லி தூள், மஞ்சதூள் சேர்த்து, விழுதாக அரைக்கவும்.


1/4 கப் கடலைப்பருப்பை  குக்கரில் வேகவைக்கவும்.

பின் 


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப்  வெங்காயம்,2 பச்சை மிளகாய்,  1 தக்காளி, 1 கப் சுரக்காய்  நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தனலில் வைக்கவும்.

குறிப்பு: இதே முறையில் புடலங்காய், பீர்க்கங்காய் சேர்த்து செய்யலாம்.


காய் பாதி வெந்ததும், 


பருப்பையும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் , உப்பு , கொத்தமல்லி தழை சேர்த்து காயை வேக வைக்கவும்.

காய் வெந்ததும், கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.







இதை சாதம் , சப்பாத்தி, தோசையுடன் பறிமாறலாம்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...