செய்முறை
இஞ்சி , பூண்டு - 6 துண்டுகள்
பட்டை,லவங்கம்-2
சோம்பு - 1 டீ.ஸ்பூன்
மிளகாய்-3
சின்ன வெங்காயம் - 10
இவற்றை எண்ணெய் சேர்த்து வதக்கவும். பின்
அடுப்பை அணைத்து, 1/4 கப் தேங்காய், 1 டீ.ஸ்பூன் மல்லி தூள், மஞ்சதூள் சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
1/4 கப் கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
பின்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப் வெங்காயம்,2 பச்சை மிளகாய், 1 தக்காளி, 1 கப் சுரக்காய் நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தனலில் வைக்கவும்.
குறிப்பு: இதே முறையில் புடலங்காய், பீர்க்கங்காய் சேர்த்து செய்யலாம்.
காய் பாதி வெந்ததும்,
பருப்பையும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் , உப்பு , கொத்தமல்லி தழை சேர்த்து காயை வேக வைக்கவும்.
காய் வெந்ததும், கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
இதை சாதம் , சப்பாத்தி, தோசையுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment