எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

எலுமிச்சை சாதம்



செய்முறை

1 கப் அரிசியை சாதம் செய்யவும். பின் 



5 பல் பூண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, 4 மிளகாய்  தனியே வைக்கவும்.


\
1 எலுமிச்சை பழத்தை பிளிந்து, அதில் உப்பு, மஞ்சதூள் சேர்த்து வைக்கவும்.


பின் 

ஒரு கடாயில் 3/4 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு தாளித்து, அதில் பூண்டு , கறிவேப்பிலை, கொத்தமல்லி,  மிளகாய் சேர்த்து, மிதமான தனலில் வதக்கவும்.

அதில் எலுமிச்சை சாறை ஊற்றி 1 நிமிடம் கொத்திக்க விட்டு அடுப்பை அணைத்து, சூடான சாதத்தை சேர்த்து கிளறவும்.


  கொத்தமல்லி தூவி , உருளைக்கிழங்கு வறுவல், தேங்காய் சட்னி, ஊறுகாயுடன் பறிமாறவும்.

குறிப்பு:  இதை வெளியூர் செல்லும் பொழுது எடுத்து செல்லலாம், கெடாமல் இருக்கும்.

தாளிக்கும் பொழுது, சீரகம், பச்சைமிளகாய் ,  நறுக்கிய சின்ன வெங்காயம் கூட சேர்க்கலாம், வெங்காயம் இருப்பதால் 1 நாள் தான் தாங்கும்.












No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...