செய்முறை
1 கப் அரிசியை சாதம் செய்யவும். பின்
5 பல் பூண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, 4 மிளகாய் தனியே வைக்கவும்.
\
1 எலுமிச்சை பழத்தை பிளிந்து, அதில் உப்பு, மஞ்சதூள் சேர்த்து வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் 3/4 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு தாளித்து, அதில் பூண்டு , கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் சேர்த்து, மிதமான தனலில் வதக்கவும்.
அதில் எலுமிச்சை சாறை ஊற்றி 1 நிமிடம் கொத்திக்க விட்டு அடுப்பை அணைத்து, சூடான சாதத்தை சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி தூவி , உருளைக்கிழங்கு வறுவல், தேங்காய் சட்னி, ஊறுகாயுடன் பறிமாறவும்.
குறிப்பு: இதை வெளியூர் செல்லும் பொழுது எடுத்து செல்லலாம், கெடாமல் இருக்கும்.
தாளிக்கும் பொழுது, சீரகம், பச்சைமிளகாய் , நறுக்கிய சின்ன வெங்காயம் கூட சேர்க்கலாம், வெங்காயம் இருப்பதால் 1 நாள் தான் தாங்கும்.
No comments:
Post a Comment