செய்முறை
2 தக்காளியை, 1/4 டீ.ஸ்பூன் சீரகதூள், 1 டீ.ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அரைககவும்.
3 கப் கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து பிசறி, அதனுடன் தக்காளி விழுதை சேர்த்து பூரி மாவு பிசையவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
குறிப்பு: மிகவும் தளர்ச்சியாக இல்லாமல், மிக கெட்டியாக இல்லாமல் , மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
பின் சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது தடிமனாக தேய்த்து, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
குறிப்பு: பூரி செய்ய எண்ணெய் நன்கு காய வேண்டும், இல்லை பொந்திவராது.
சப்பாத்தி
செய்முறை
இதே முறையில் மாவை பிசையும் பொழுது, சிறிது தளர்ச்சியாக பிசைந்து, சிறிது நேரம் மாவை மூடி வைத்து, செய்யவும்
மெல்லியதாக தேய்த்து சுடவும்.
No comments:
Post a Comment