செய்முறை
து.பருப்பை வேகவைக்கும் பொழுது, ஒரு பெரிய நாட்டு தக்காளியையும் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
தக்காளியை தோல் உரித்து மசிக்கவும்.
பின் பருப்பில் நீர் , மஞ்சதூள், விளக்கெண்ணெய் அ நல்லெண்ணெய் ஊற்றி, கொதிக்க வைத்து, 2 கப் பருப்பு தண்ணீரை மசித்த தக்காளியுடன் சேர்க்கவும்.
பின் அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, மசித்த
( சீரகம் - 1/2 டீ.ஸ்பூன்
மிளகு - 1/4 டீ.ஸ்பூன்
பூண்டு - 2 பல் பெரியது
பெருங்காயம்)
சாம்பார் தூள் - 1 டீ.ஸ்பூன்
உப்பு
1/2 எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, கரைத்து சேர்க்கவும்.
பின் கடுகு,வெங்காயம் தாளித்து, கொட்டி , பொங்கிவரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment