செய்முறை
பொடியாக நறுக்கிய
1 கப் வெங்காயம்
1/2 கப் தக்காளி, பட்டானி ,
பட்டை, கிராம், ஏலக்காய், பி.இலை, சோம்பு - தாளிக்க
பச்சை மிளகாய் - 2
தயாராக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை,..... தாளித்து, வெங்காயம் மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் 1/4 கிலோ சுத்தம் செய்த்த ஆட்டு கீமாவை சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சதூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சீரக தூள், 2 ஸ்பூன் மல்லி தூள், 1/2 ஸ்பூன் என் கறிமசாலா தூள் சேர்த்து, வதக்கி
அதனுடன் பட்டானி, தக்காளி, உப்பு சேர்க்கவும்.
அதை வதக்கி,மூடி வேகவைக்கவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூடான சாதம், நான், ரொட்டி வகைகளுடன் சுவையாக இருக்கும்.
கீமா ஆப்பம், கீமா ரோஸ்ட் கூட இந்த லிங்கில் காலிப்பூ ஆப்பம் உள்ளவாறு செய்யலாம்.
விருப்பப்பட்டால் மேலே சீஸ் துருவலை தூவி பறிமாறலாம்.
No comments:
Post a Comment