எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

இறால் பிரியாணி



செய்முறை

200 கிராம் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம்  ஊறவைத்து
1 விசில் விட்டு , சாதத்தை உதிரியாக வைக்கவும்.

250 கிராம் சுத்தம் செய்த இறாலை சிறிது இஞ்சிபூண்டு விழுது, உப்பு, மஞ்சதூள், மிளகாய் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, எண்ணெயில் பொறிதெடுத்து வைக்கவும்.

பின் 
ஒரு கடாயில் 1 கரண்டி எண்ணை ஊற்றி , பட்டை கிராம் ஏலக்காய், பி.இலை, தாளித்து, 1 டே.ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பின் 1 சிறிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சோம்பு தூள், 1/2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து வதக்கி, ஊறிய இறாலை சேர்த்து, 1 ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சாதம், கொத்தமல்லி தூவி பிரட்டி, 

                                      
                                      
பொறித்த வெங்காயம் , கொத்தமல்லி தூவி, 5 நிமிடம் சிம்மில் மூடி வைத்து , அடுப்பை அணைக்கவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...