எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் உருண்டை குழம்பு


செய்முறை

1/2 கிலோ மட்டனுடன், 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,சிறிது மஞ்சதூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம்மசாலாதூள் , உப்பு சேர்த்து ,  மிக்சியில் அரைத்து , சிறிது நேரம் ஊறவைத்து,  உருண்டைகளாக செய்யவும்.


பின் 

பின் ஒரு கடாயில் 1 மே.கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் 1 கப் சிறிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் அடுப்பை அணைத்து , 1 டே.ஸ்பூன் என் கறிமசாலா பொடியை போடவும். ஆறியதும் அரைத்து வைக்கவும்.

பின்
வேறொரு கடாயில் எண்ணெய் விட்டுஅதில் பொடியாக நறுகிய 1 பெரிய வெங்காயம், 1/2 கப் சிறிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
பின் தக்காளி போட்டுஅதனுடன் சிறிது உப்பு போட்டு நன்றாக வதக்கவும். 

தக்காளி நன்கு வதங்கியதும்,அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.பின் தேவையான தண்ணீர் விட்டுஉப்பு போட்டு  மட்டன் உருண்டைகளை சேர்க்கவும்.

மூடிவைத்து மட்டன் வேகும்வரை விட்டு, பின் ¼ கப் தேங்காய் பால் விட்டு, கொத்தமல்லி சேர்த்து சிம்மில் 2 நிமிடம் விடவும். இது செமி கிரேவி பதம் வந்ததும்கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: இது சப்பாத்திதோசைசாதம்தயிர் சாதம் உடன் சுவையாக இருக்கும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...