எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வடகறி


செய்முறை

1 கப் கடலைப்பருப்பை ஊறவைத்து, வடிகட்டி
பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சிபூண்டு அல்லது 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து , கொத்தமல்லி சேர்த்து சிறுசிறு வடைகளாக   சுடவும்.

பின் 
1/4 கப் தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சைமிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை
மஞ்சதூள், 1 ஸ்பூன் மிளகாய்தூள்,1/2 ஸ்பூன் கரம்மசாலாதூள், 2 ஸ்பூன் தனியாதூள்
இவற்றை தயாராக வைக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ........   தாளித்து
வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி, தூள்கள் அணைத்தும் சேர்த்து வதக்கி, தேவையான உப்பு, தண்ணீர் விட்டு, பச்சை வாசனை போகும் வரை மூடி கொதிக்கவிடவும்.
பின் தேங்காய் அரைத்தது, வடைகளை சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து, பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.


குறிப்பு: 
சிறிது நேரம் கழித்து கெட்டியாகிவிட்டால், சிறிது சுடு தண்ணீர் விட்டு பிரட்டவும்.
ஆப்பம், தோசை, புலாவுடன் பறிமாறலாம்.
மசால் வடை செய்து மீந்தால், அதை பொடித்து போட்டு செய்யலாம்.










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...