செய்முறை
1 வெங்காயம், 1 வரமிளகாய், 1/4 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சோம்பு இவற்றை எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின் மஞ்சதூள், 1 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து ஆறவிட்டு,
2 தக்காளி, 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது இவற்றுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 1 பட்டை லவங்கம், கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் உப்பு, சிறிது தக்காளி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு,
வேகவைத்த முட்டையை சேர்த்து , கொத்தமல்லி தழை தூவி மிதமான தனலில் பிரட்டி இரக்கவும்.
இதை சூடான சாதம், தோசை, ஆப்பம், சப்பாத்தி, கலந்த சாத வகைகளுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
சளி பிடித்திருக்கும் சமயத்தில் , குழந்தைகளுக்கு இதை செய்து தரலாம்.
No comments:
Post a Comment