செய்முறை
முதலில் கத்தரிக்காயை அடுப்பில், மிதமான சூட்டில் நன்கு வேகும் வரை சுட்டு எடுத்து, தோல் உரிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,
கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம், 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கி மசித்த கத்தரிக்காய், 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
1/4 ஸ்பூன் மஞ்சதூள், 1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்
1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதங்கி, மசித்து, திரண்டு வரும் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.
இது சப்பாத்தி, ரொட்டி, சாதம்........வுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment