செய்முறை
முதலில் 1 கப் பச்சரிசியை 2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு எண்ணெய் சேர்த்து , 1 விசில் விடவும்.
1 பெரிய உருளைக்கிழங்கை 95% வேகவைத்து, தோலுரித்து வெட்டி வைக்கவும்.
வெந்தயக்கீரையை 1 கப் - நறுக்கி வைக்கவும்.
1/4 ஸ்பூன் மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 ஸ்பூன் கரம்மசாலாதூள்,1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, உப்பு தயாராக வைக்கவும்.
ஒரு கடாயில் 3/4 கரண்டி எண்ணெய் விட்டு, சீரகம் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும்.
பின் பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சுவையான வெந்தகீரை சாதம் தயார்.
சாதம் சேர்க்காமல் , இதனை சப்பாத்தி, தோசையுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment