எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஆலூ மேத்தி புலாவ்




செய்முறை

முதலில் 1 கப் பச்சரிசியை 2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு எண்ணெய் சேர்த்து , 1 விசில் விடவும்.

1 பெரிய உருளைக்கிழங்கை 95% வேகவைத்து, தோலுரித்து வெட்டி வைக்கவும்.
வெந்தயக்கீரையை 1 கப் - நறுக்கி வைக்கவும்.

1/4 ஸ்பூன் மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 ஸ்பூன் கரம்மசாலாதூள்,1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, உப்பு தயாராக வைக்கவும்.




ஒரு கடாயில் 3/4 கரண்டி எண்ணெய் விட்டு, சீரகம் கடுகு தாளித்து,  பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும்.
பின் பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



அதனுடன் வெட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து, நன்கு பிரட்டி, அதில் சாதம் சேர்த்து பிரட்டவும்.
சுவையான வெந்தகீரை சாதம் தயார்.
சாதம் சேர்க்காமல் , இதனை சப்பாத்தி, தோசையுடன் பறிமாறலாம்.











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...