எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ரவா கிச்சடி



செய்முறை

1 கப் ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு 2 நிமிடம் வறுத்து வைக்கவும்.



பின் தேவையான காய்களை நறுக்கி வைக்கவும் (கேரட், பீன்ஸ், பட்டானி, கோஸ் விருப்பப்பட்டால்)
வெங்காயம்-1, 3 பச்சை மிளகாய், வரமிளகாய் , சோம்பு, முந்திரி, கறிவேப்பிலை
தயாராக வைக்கவும்.

பின் ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, சோம்பு, முந்திரி தாளித்து, கறிவேப்பிலை, மிளகாய் , வெங்காயம், காய்கள் சேர்த்து வதக்கவும்.


காய் முக்கால் வேக்காடு ஆனதும்,1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 சிறிய தக்காளி நறுக்கியதை சேர்த்து லேசாக வதக்கி, 
பின் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு  சேர்த்து, கொதிக்க விடவும்
தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையை கிளறிக்கொண்டே சேர்த்து, கொத்தமல்லி தூவி வேகவிடவும்.


கடைசியாக சிறிது நெய் சேர்த்து பிரட்டி , சூடாக 
தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...