செய்முறை
1 கப் ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு 2 நிமிடம் வறுத்து வைக்கவும்.
பின் தேவையான காய்களை நறுக்கி வைக்கவும் (கேரட், பீன்ஸ், பட்டானி, கோஸ் விருப்பப்பட்டால்)
வெங்காயம்-1, 3 பச்சை மிளகாய், வரமிளகாய் , சோம்பு, முந்திரி, கறிவேப்பிலை
தயாராக வைக்கவும்.
பின் ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, சோம்பு, முந்திரி தாளித்து, கறிவேப்பிலை, மிளகாய் , வெங்காயம், காய்கள் சேர்த்து வதக்கவும்.
காய் முக்கால் வேக்காடு ஆனதும்,1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 சிறிய தக்காளி நறுக்கியதை சேர்த்து லேசாக வதக்கி,
பின் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கொதிக்க விடவும்
தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையை கிளறிக்கொண்டே சேர்த்து, கொத்தமல்லி தூவி வேகவிடவும்.
கடைசியாக சிறிது நெய் சேர்த்து பிரட்டி , சூடாக
தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்
No comments:
Post a Comment