செய்முறை
1 கப் தட்டபயிரை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
அதனுடன் 2 ஸ்பூன் அரிசியும் சேர்த்து ஊறவைக்கவும்.
பின் நீரை வடிகட்டி , அதனுடன் வரமிளகாய் -4, பச்சைமிளகாய்
இஞ்சிபூண்டு 6 துண்டுகள்
சோம்பு - 1/2 ஸ்பூன்
உப்பு
சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய 1/2 கப் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி , அரைத்த பயிரை சேர்த்து கலந்து,
உருட்டி, தட்டி, எண்ணெயில் வடையாக பொறித்தெடுக்கவும்
உருட்டாமல் கிள்ளி போட்டு எடுத்தால் குழந்தைகள் விரும்பி மொறுமொறு பக்கோடா போல் உண்பர்
No comments:
Post a Comment