செய்முறை
பொடியாக நறுக்கிய கெலகோஸ் - 1 கப்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 2 ஸ்பூன் பச்சைபயிர், 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து மிதமான தனலில், நிறம் மாறும் வரை வறுத்து,
காயை சேர்த்து நன்கு வதக்கவும்
காய் வதங்கியதும், 1/4 கப் துருவிய தேங்காய், 2 பல் பூண்டு, சிறு உருண்டை புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும் , உப்பு சேர்த்து , தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
இதை சாதம்,இட்லி தோசை, சப்பாத்தி, ரொட்டியில் தடவி
பறிமாறலாம்.
No comments:
Post a Comment