செய்முறை
1 கப் இட்லியரிசியுடன் 1/2 கப் பச்சைபயிரை 2 மணி நேரம் ஊறவைத்து
அதனுடன் 4 காய்ந்தமிளகாய், 1/4 ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
( சின்ன வெங்காயம் விரும்பினால் 6 சேர்த்து அரைக்கலாம்)
சேர்த்து இட்லி மாவு பதம் அரைத்து, உப்பு சேர்த்து
லேசாக புளிக்க விட்டு, பின் தேவையானால் தண்ணீர் சேர்த்து கலக்கி
தோசை சுடவும்
இந்த மாவை வைத்து, இட்லி , தோசை, பணியாரம்,
அரிந்த வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து ஊத்தப்பம்
செய்யலாம்
எளிதில் செய்ய கூடிய சத்தான மாவு.
பருப்பு சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் ரோஸ்ட் செய்து
அவர்களுக்கு பிடித்த சட்னியுடன் பறிமாறலாம்.....
No comments:
Post a Comment